/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ துர்கா பரமேஸ்வரி நடனம் ஆடி கர்நாடக நடன குழு பக்தி பரவசம் | Temple Festival
துர்கா பரமேஸ்வரி நடனம் ஆடி கர்நாடக நடன குழு பக்தி பரவசம் | Temple Festival
நீலகிரி மாவட்டம் குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் சார்பில் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆழ்வார்பேட்டை கோதண்டராமர் கோயிலில் இருந்து பால்குடம் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் நடன குழுவினரின் துர்கா பரமேஸ்வரி நடனம் தத்ரூபமாக நடந்தது. தாரை தப்பட்டைகள் முழங்க பக்தர்கள் நடனமாடி வந்தனர். ஏப்ரல் 27 ம் தேதி திருப்பூச்சாற்று நிகழ்ச்சி, ஏப்ரல் 8 ம் தேதி கரக ஊர்வலம், திருத்தேர் ஊர்வலம், பூ குண்டம் இறங்குதல், புஷ்ப பல்லக்கு , முத்துப் பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏப் 06, 2024