நூறு வருடம் பழமையான குட்டை... அசுத்தமான முறையில் கிடக்கிறது...
கோவையை அடுத்த உருமாண்டம்பாளையத்தில் உள்ள குட்டை பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இந்த குட்டையில் மழைக்காலங்களில் மழை தண்ணீர் மட்டும் தேக்கி வைக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் துணிகளை துவைப்பதற்காக இந்த குட்டையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது குடியிருப்புகள் அதிகமாக உருவானதால் விவசாயம் நின்று போனது. மேலும் அந்த குட்டையில் சாக்கடை நீர் கலந்து மாசு அடைந்துள்ளது. சாக்கடை நீர் கலந்த குட்டை நன்னீர் குட்டையாக மாற்றப்படும் முயற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 26, 2025