/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு|world pharmacist day awareness| Kovai
கோவையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு|world pharmacist day awareness| Kovai
உலக மருந்தாளுநர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25ல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேரணியை துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருந்து பாதுகாப்பு தொடர்பான பதாகைகளை ஏந்தி 3 கிமீ நடைபயணம் சென்றனர். மக்களை நோயில் இருந்து பாதுகாப்பதில் பார்மஸிஸ்டின் பங்கு மிக முக்கியமானது. உலகிலே மிக தரமான மருந்துகள் மலிவான விலையில் இந்தியாவில் தான் கிடைக்கிறது. பார்மஸிஸ்ட்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெறுகிறது என்றார் முனைவர் ரவி
செப் 25, 2024