உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / விண்ணை பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்| Kanchipuram |Subramanya Swamy Temple

விண்ணை பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்| Kanchipuram |Subramanya Swamy Temple

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவர் முருகப்பெருமான் பச்சைப்பட்டுத்தி வள்ளி தேவானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித் தேரில் எழுந்தருளினார். தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் வெள்ளித் தேரினை அரோகரா கோஷம் முழங்க கோயில் உட்பிரகாரத்தில் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஜூன் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை