/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ பட்டா பெயர் மாற்றம் செய்ய கை நீட்டிய விஏஓ கைது | VAO arrested for bribery|Krishnagiri
பட்டா பெயர் மாற்றம் செய்ய கை நீட்டிய விஏஓ கைது | VAO arrested for bribery|Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியபூதக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் 2023ல் 80 சென்ட் நிலம் வாங்கினார். பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தார். ஆனால், மூன்று மாதங்கள் ஆகியும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இது குறித்து ராஜேந்திரனின் மைத்துனர் வெங்கடேசன், சந்தனப்பள்ளி விஏஓ மாதேஸ்வரனிடம் கேட்டுள்ளார். 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் பெயர் மாற்றம் செய்வேன் என்றார் விஏஓ.
செப் 27, 2024