திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival | Madurai
மதுரை புது ராமநாதபுரம் சாலையில் ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் சொனிக்கா. ரா. மெருமாளய்யர் பரம்பரைக்கு பாத்தியப்பட்டது. கோயிலில் திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து கலச பூஜை முடிந்த பின்பு இன்று காலை 7. 35 மணிக்கு மேல் கடம் புறப்பட்டாகி கோயிலை சுற்றி வலம் கொண்டு வரப்பட்டு கோபுரங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ஆக 23, 2024