ஐப்பசி மாதம் நடக்கும் பூ புத்தரி எனும் அறுவடை திருவிழா | Netkadir harvest festival | Pandalur
லகிரி மாவட்டம் பந்தலூரில் பழங்குடியின மக்களின் பூ பூத்தரி எனப்படும் அறுவடைத் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இதில் பனியர் சமுதாய பழங்குடியின மக்கள், ஒருவரை தேர்வு செய்து பத்து நாட்கள் விரதம் இருந்து, நெல் வயலுக்கு ஊர்வலமாக செல்வர். அங்கு குலதெய்வத்தை வழிபட்டு நெற்கதிர்களை கோயிலுக்கு கொண்டு வந்து பூஜைகள் செய்வர். அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். தொடர்ந்து நெற்கதிர்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் அறுவடை செய்யப்படும். அறுவடை திருவிழாவை குந்தலாடி பகவதி அம்மன் கோயில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பனியர் சமுதாய பழங்குடியின மக்கள் இணைந்து வெகு விமரிசையாக கொண்டாடினர். தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நெற்கதிர்கள் தயாராகாத நிலையில், தமிழக எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் செட்டி ஆலத்தூர் பகுதியில் உள்ள வயலுக்கு, கோயில் கமிட்டி தலைவர் வேலாயுதன் மற்றும் கோயிலில் விரதம் இருந்த பழங்குடியின இளைஞர் குங்கன் ஆகியோர் தலைமையில், பூஜைகள் செய்த பின் வயலுக்கு சென்று குல தெய்வத்திற்கு பூஜைகள் செய்து நெற்கதிர்களை பறித்து மகா விஷ்ணு கோயிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து பழங்குடியின இசை வாத்தியாங்களுடன் நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம், நெற்கதிர்கள் மற்றும் அரச மரத்து இலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குந்தலாடி பகவதி அம்மன் கோயில் கமிட்டி நிர்வாகிகள் பரசுராமன், பாபு, ராஜேஷ், ஜெயபிரகாஷ், பழங்குடியின சமுதாய தலைவர்கள் வாசு, குமரன், செங்குட்டவன், வேலன், பழங்குடி மக்கள், வயநாடன் செட்டி சமுதாய மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.