/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு | Chithirai Festival Celebrations
சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு | Chithirai Festival Celebrations
காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ளது ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 14 ம் தேதி துவங்கியது. இரண்டாம் நாள் விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் சீர் வரிசை மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்தனர். ஸ்ரீராஜ கணபதி கோயிலில் இருந்து பெண்கள் ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஏப் 16, 2024