உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / காயமடைந்த 2 மீனவர்கள் யாழ்பாணம் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் | Karaikal | The Sri Lankan Navy opened fire

காயமடைந்த 2 மீனவர்கள் யாழ்பாணம் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் | Karaikal | The Sri Lankan Navy opened fire

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த ஆனந்தவேலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 26 ம் தேதி 13 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரை தென் கிழக்கு பகுதியில் மீன் பிடித்து திரும்பிய போது இலங்கை கடற்படையினர் சுற்றி வளைக்கப்பட்டனர். மீனவர்களின் படகுகளை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். உயிர் தப்பிக்க படகிலிருந்து குதிக்க முயன்ற 2 மீனவர்கள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை