தாயமங்கலத்தில் குவிந்த பக்தர்கள் | Kumbabhishekam | Thayamangalam
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இன்று யாக வேள்விகள் நிறைவுற்று கடம் புறப்பாடாகி கோயிலை சுற்றி வலம் வந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், விழா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தாயமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
ஆக 22, 2024