/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ கலெக்டருக்கு போனில் டோஸ் விட்ட அமைச்சர் நேரு | minister nehru gives dose to collector
கலெக்டருக்கு போனில் டோஸ் விட்ட அமைச்சர் நேரு | minister nehru gives dose to collector
நெல்லை காந்தி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகளை அமைச்சர்கள் நேரு மற்றும் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது கலெக்டர் கார்த்திகேயன் வரவில்லை. கடுப்பான அமைச்சர் நேரு கலெக்டருக்கு போன் போட்டார். கலெக்டர் சார் எங்கே இருக்கீங்க. நாங்க 2 அமைச்சர்கள் வந்துள்ளோம். நீங்க வர வேண்டாமா? என கடிந்து கொண்டார். அப்போது பிஆர்ஓ சுகன்யா அமைச்சரிடம் ஏதோ சொல்ல வந்தார். அவரை பார்த்து அமைச்சர், நீ போம்மா என கோபமாக கூறினார். அமைச்சர்கள் ஆய்வில் கலெக்டர் வராததால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆக 04, 2024