உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 52வது நாள் சிறப்பு பூஜை

கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 52வது நாள் சிறப்பு பூஜை

கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 52வது நாள் சிறப்பு பூஜை | Ellai Muneeshwarar Temple | 52th day Special Pooja | Manavur | Thiruvallur திருவள்ளூர் மாவட்டம் மணவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் கோயில் உள்ளது. கேட்கும் வரம் தரும் முனீஸ்வரர் சுவாமியை மணவூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் கடந்த அக்டோபர் 11 ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்ற நிலையில், இன்று 52வது நாள் விழாவையொட்டி அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையில் மணவூர் கிராம மக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் முனீஸ்வரர் சுவாமி பக்தர்கள் செய்திருந்தனர்.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை