தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தவர்களுக்கு கால்முறிவு! ₹50 Lakh Theft | Lorry Theft Gang | 5 Arres
திருச்சி மாவட்டம் காவல்காரன்பாளையம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி, காய்கறி லோடு ஏற்றி வந்த டிரைவர் ஆனந்த், லோகேஸ்வரன் வாகனத்தை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றனர். திரும்பி வந்த போது, லாரியில் இருந்து 3 இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இறங்கி தப்பி ஓடினர். சிறிது தூரத்தில் இருந்த காரில் ஏறி இளைஞர்கள் தப்பினர். டிரைவர்கள் லாரிக்கு திரும்பி வந்து பார்த்த போது, கும்பகோணத்தில் காய்கறி லோடு இறக்கி விட்டு, வாங்கி வைத்திருந்த 50 லட்ச ரூபாயை காணவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டவாய்த்தலை போலீசார் விசாரித்து வந்தனர். திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் காரில் சிலர் சந்தேகத்துக்கு இடமான முறையில் திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.