காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு: தளபதி Army Chief Gen Upendra Dwivedi| infiltration att
அண்டை நாடுகளுடனான எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நிலவும் சூழல் குறித்து ராணுவ தளபதி உபேந்திரா திவேதி கூறியதாவது- ஜம்மு-காஷ்மீரில் கடந்த வருடம் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இன்றைய நிலவரப்படி காஷ்மீர் பள்ளத்தாக்குகள் மற்றும் ஜம்முவில் எஞ்சி உள்ள பயங்கரவாதிகளிலும், 80 சதவீதம் பேர் பாகிஸ்தான் நாட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என நம்புகிறோம். வடக்கு காஷ்மீர் மற்றும் தோடா-கிஷ்த்வார் பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் சமீப காலங்களில் அதிகரித்து உள்ளன. இருப்பினும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. ஊடுருவல் முயற்சிகளும் தொடர்கின்றன. ட்ரோன்கள் மூலம் போதை பொருள்கள் கடத்தும் முயற்சிகள் நடக்கின்றன.