/ தினமலர் டிவி
/ பொது
/ ஆரோவில் காட்டுக்குள் நடந்த மாரத்தான் ஓட்டம் Auroville | International city |Puducherry | 42 km mara
ஆரோவில் காட்டுக்குள் நடந்த மாரத்தான் ஓட்டம் Auroville | International city |Puducherry | 42 km mara
புதுச்சேரியில் இருந்து சுமார் 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆரோவில் நகரம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படுகிறது. யோகம், தியானம் வழியாக புதிய சமூகத்தை உருவாக்கும் ஒரு சோதனை முயற்சியாக ஆரோவில் சர்வதேச நகரம் செயல்படுகிறது. அமைதி, மனித குல ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழலை வலியுறுத்தும் வகையில் 42 கிலோ மீட்டர் மாரத்தான் இன்று நடைபெற்றது. ஆரோவில் வாசிகளுடன் புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, மும்பை, ஆந்திரா, கேரளா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று ஓடினர்.
பிப் 16, 2025