/ தினமலர் டிவி
/ பொது
/ வங்கதேச இடைக்கால அரசுக்கு இந்தியா கொடுத்த அட்வைஸ் | Bangladesh violence |Randhir Jaiswal
வங்கதேச இடைக்கால அரசுக்கு இந்தியா கொடுத்த அட்வைஸ் | Bangladesh violence |Randhir Jaiswal
| நமது பக்கத்து நாடான வங்கதேசத்தில் கடந்த பல மாதங்களாகவே வன்முறை தொடர்ந்து நடக்கிறது. ஆகஸ்ட் மாதம் வன்முறை மிகவும் மோசமானதால், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அங்கு இடைக்கால அரசு பொறுப்பேற்ற சூழலில், நிலைமையை நார்மல் ஆக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இதற்கிடையே இஸ்கான் அமைப்பை சேர்ந்த இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைதை தொடர்ந்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்துக்களை குறிவைத்து இந்த வன்முறை நடப்பதாக கூறப்படுகிறது.
நவ 29, 2024