போலீஸ் விசாரணையில் மாணவர்கள் பகீர் தகவல் Bomb threat to Delhi Schools| Delhi School Students Bomb
டில்லியில் செயல்படும் பல்வேறு பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தனர். கடந்த மாதம், 28ம் தேதி, இம்மாதம் 13 மற்றும் 17ம் தேதிகளில் டில்லியில் உள்ள முக்கிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த வாரம் ரோஹினி மற்றும் அதை ஒட்டிய பகுதியில் உள்ள இரு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டபோதெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. எனினும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. வெறும் புரளி என தெரிய வந்தது. மிரட்டல் வந்த இமெயில் குறித்து டில்லி போலீசார் விசாரித்தனர்.