/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழிசை வீட்டிலேயே தடுத்து நிறுத்தி வைப்பு | Chennai corporation | Worlers Strike
தமிழிசை வீட்டிலேயே தடுத்து நிறுத்தி வைப்பு | Chennai corporation | Worlers Strike
சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் 13 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பை சேகரிப்பு பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் இவர்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது. அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை சுட்டிக்காட்டி வேலைக்கு திரும்புமாறு சென்னை மாநகராட்சி நேற்று அழைப்பு விடுத்தது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை முழுக்க முழுக்க தவறானது என அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த சூழலில் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
ஆக 13, 2025