சென்னைவாசிகளை மிரள வைத்த 3 கார் சம்பவங்கள்: பரபரப்பு வீடியோ chennai heavy rain 3 cars damaged
டிட்வா புயல் வலுவிழந்த பிறகும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடர்கிறது. இன்று சென்னைக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டாக வானிலை மையம் மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வரை சென்னையில் மழை நிற்காது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் நேற்றிரவு முதலே காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. அந்நேரம் சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் மீது மரம் விழுந்தது. கார்கள் சேதமானது. ஆனால், காரில் இருந்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி கார்களை மீட்டனர்.