அதிகாரிகள் அலட்சியம் ஐகோர்ட் அதிருப்தி! | Chennai High Court | Tondiarpet
தண்டையார்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தூயமூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது 2022 நிலவரப்படி இப்பகுதியில் 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் உள்ளது.
அக் 26, 2024