மழையால் போலீஸ் ஸ்டேஷனையே இடம் மாற்றியாச்சு | Chennai rain | Rain Alert
203 வெள்ள அபாய பகுதிகள் ரெடியாக நிற்கிறது படகுகள் வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த மண்டலமாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு, அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ரெட் அலர்ட் அறிவிப்பை தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மழை அதிகம் பெய்யும் பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களில் 1,300 தீயணைப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர்.
அக் 15, 2024