பாசி படர்ந்த நீரில் பாடாய் படும் மக்கள் | ChennaiFloods
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர், பூந்தோட்டம், சாய்நகரில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 3 நாட்களாக பெய்த மழையால், தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 40 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து உள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கினர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஆனால் அந்த பணி பாதியில் நிற்பதால் வெள்ளம் வடிய வழி இல்லை. ஏற்கனவே பெய்த மழையில் தேங்கிய நீர், வடியாமல் பாசி படர்ந்து இருந்த நிலையில், 3 நாளாக பெய்த மழையால் நிலைமை இன்னும் மோசமானது.
அக் 16, 2024