/ தினமலர் டிவி
/ பொது
/ கடை மீது காரை மோதிய பேராசிரியர்: நடந்தது என்ன? | chidambaram police crime |
கடை மீது காரை மோதிய பேராசிரியர்: நடந்தது என்ன? | chidambaram police crime |
சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். 48. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு சிதம்பரம் காசுக்கடை தெருவில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு பொருள் வாங்க சென்றார்., அப்போது, கடைக்காரர் வேல்முருகனுக்கும், பாலசந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேல்முருகன் மகன் பிரபாகரன் நெட்டி தள்ளியதில் பாலச்சந்திரன் கீழே விழுந்தார். பின்னந்தலையில் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. கடும் ஆத்திரத்துடன் பாலச்சந்திரன் வீடு திரும்பினார். இரவு 10.30 மணியளவில் பாலச்சந்திரன் காரை ஓட்டி சென்று கடை மீது மோதினார். கடையில் இருந்தவர்கள் அலறினர்.
மார் 01, 2025