உலகை உலுக்கிய விமான விபத்து: நேரில் பார்த்தவர்கள் பரபரப்பு பேட்டி Dhaka aircraft Crash19 dies studen
டாக்காவில் உள்ள Uttara உத்தாரா பகுதியில் மைல்ஸ்டோன் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. இன்று மதியம் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான F-7 BGI போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. டாக்கா விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் மைல் ஸ்டோன் கல்வி நிறுவனத்தின் 4 மாடி கட்டடத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் பள்ளி கட்டடம் நொறுங்கியது. விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பள்ளியை நோக்கி கதறியபடி ஓடினர். பள்ளி வளாகத்தின் மற்ற கட்டடங்களில் இருந்த ஆசிரியர்கள்,ம ாணவர்களும் ஓடிச சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.