/ தினமலர் டிவி
/ பொது
/ விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி! | Drugs | Chennai Drug Arrest | former DGP Son Arrest
விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி! | Drugs | Chennai Drug Arrest | former DGP Son Arrest
சென்னை நந்தம்பாக்கத்தில் போதை பொருள்கள் விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நைஜீரியாவை சேர்ந்த ஜான் எஸி, மெக்கலன் மற்றும் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 லட்சம் ரொக்கம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அருண் முன்னாள் தமிழக டிஜிபி ரவீந்திரநாத் மகன் என்பது தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளது
அக் 25, 2024