உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டில் போலி மது தயாரிப்பு; போலீஸ் ரெய்டில் அம்பலம்

வீட்டில் போலி மது தயாரிப்பு; போலீஸ் ரெய்டில் அம்பலம்

சென்னையில் போலி மது தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அண்ணாநகர் மதுவிலக்கு போலீசார், சேத்துப்பட்டு பகுதியில் 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மாதவரம் கார்த்தி, கொடுங்கையூர் முகமது நசீம், சையது அப்துல், தண்டையார்பேட்டை ராவுத்தர் நைனார் என்பது தெரிந்தது. அவர்களது ஆட்டோவை சோதனை செய்தபோது, 50 வெளிநாட்டு போலி மதுபாட்டில்கள் இருந்தன. அவர்களிடம் விசாரித்ததில், கொடுங்கையூர், காவேரி சாலையில் கோபி என்பவரின் வீட்டில் போலி மது வகைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ