/ தினமலர் டிவி
/ பொது
/ அவிநாசி சுங்கச்சாவடியில் போலீஸ் குவிப்பு: பரபரப்பு farmers protest against toll plaza| Avinashi
அவிநாசி சுங்கச்சாவடியில் போலீஸ் குவிப்பு: பரபரப்பு farmers protest against toll plaza| Avinashi
சுங்கச்சாவடி திறக்க எதிர்ப்பு விவசாயிகள் முற்றுகையால் பரபரப்பு டிஸ்க்: திருப்பூர் அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், வேலம்பட்டி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. நீர் நிலையை ஆக்கிரமித்து இந்த சுங்கச்சாவடி கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் எழுப்பியுள்ளனர். இதனால், சுங்கச்சாவடியை திறக்க விடாமல் விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன. இந்நிலையில், சுங்கச்சாவடி திறக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, 10 நாட்களுக்கு முன், போராட்டக்குழுவினர் சுங்கச்சாவடி முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நவ 13, 2024