உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணியில் சர்ச்சை | Guduvancheri lake issue | Chengalpattu collector

கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணியில் சர்ச்சை | Guduvancheri lake issue | Chengalpattu collector

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள கூடுவாஞ்சேரி ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. ஏரியை புனரமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்காவும் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். சமீபத்தில் 6.5 கோடி ரூபாய் அரசு நிதியில் ஏரி புனரமைப்பு பணிகள் நடந்தது. 3 மாதங்களுக்கு முன் பணிகள் முடிந்த நிலையில், ஏரியை சரியாக சீரமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பொதுப்பணி அதிகாரிகள் ஏரி சீரமைப்பு பணியை முறையாக கண்காணிக்கவில்லை என்றும் புகார் வந்தது.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !