/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரே இரவு மழையில் மூழ்கிய மணலி இடுகாடு | Heavy rain | Manali | Water logging | Flood in Cemetery
ஒரே இரவு மழையில் மூழ்கிய மணலி இடுகாடு | Heavy rain | Manali | Water logging | Flood in Cemetery
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மணலி, கொரட்டூர், வடபழனி, கத்தியவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. சென்னை புறநகர் பகுதியான மணலியில் மட்டும் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மணலியில் மிக மிக பலத்த மழை பெய்ததற்கு மேக வெடிப்பே காரணம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ஆக 31, 2025