உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் PM-ஐ அலறவிட்ட பிரமோஸ் ஏவுகணை | ind vs pak | pahalgam attack | brahmos missile | Shehbaz Shari

பாக் PM-ஐ அலறவிட்ட பிரமோஸ் ஏவுகணை | ind vs pak | pahalgam attack | brahmos missile | Shehbaz Shari

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பயங்கர போர் வெடித்தது. 4 நாட்கள் நீடித்த இந்த போரில் பாகிஸ்தானுக்கு இந்தியா மிகப்பெரிய பதிலடியை கொடுத்தது. குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது. இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது. இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான். இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பல சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியே வந்து விட்டன. இப்படி பலத்த அடி வாங்கி தோற்ற பிறகும், போரில் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று பெருமை பீற்றி வந்த பாகிஸ்தான் முதல் முறையாக கதறி இருக்கிறது.

மே 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை