ஆபரேஷன் சிந்தூர் பெருமையான தருணம்: பவன் கல்யாண் India vs Pak|Act like Israel|terrorism|Pawan Kalyan
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு பெருமை மிக்க தருணம் என்று ஆந்திரா துணை மதல்வர் பவன் கல்யாண் கூறினார். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல், பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. நமது ராணுவம் பாராட்டத்தக்க செயலை செய்துள்ளது. இது ஒரு நீண்ட போருக்கான நேரம். இஸ்ரேலை போல, பயங்கரவாதத்துக்கு எதிராக, ஒரு தீர்க்கமான தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியர்களை தொடர்ந்து தாக்குவதை கண்டிக்கிறோம். சில காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியிருந்தனர். அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவார்கள் என பவன் கல்யாண் கூறினார்.