/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரே ஆயுதத்தில் 3 அஸ்திரம்-இந்தியா டைமிங் சம்பவம் india vs pakistan | Bhargavastra anti drone system
ஒரே ஆயுதத்தில் 3 அஸ்திரம்-இந்தியா டைமிங் சம்பவம் india vs pakistan | Bhargavastra anti drone system
இந்தியா, பாகிஸ்தான் மோதலில் போர் விமானங்கள், ஏவுகணைகளை விட அதிக அளவில் ஏவப்பட்டது ட்ரோன்கள் தான். பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குண்டு வீசி தகர்க்க போர் விமானம், ஏவுகணைகளுடன் சேர்த்து இஸ்ரேல் தந்த ஹார்பி ரக ட்ரோன்களையும் இந்தியா கொத்து, கொத்தாக அனுப்பியது. இதே போல் பாகிஸ்தானும் 350க்கும் அதிகமான துருக்கி ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது. நம் வான் பாதுகாப்பு கவசங்களான எஸ்-400, ஆகாஷ் சிஸ்டம் போன்றவை ட்ரோன்களை நடுவானிலேயே சல்லி சல்லியாக நொறுக்கின.
மே 14, 2025