உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரானில் இருந்து டில்லி வந்த இந்திய மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு Israel - Iran War| Operation Sindhu|

ஈரானில் இருந்து டில்லி வந்த இந்திய மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு Israel - Iran War| Operation Sindhu|

இஸ்ரேல் - ஈரான் இடையே ஒரு வாரமாக நடக்கும் போர் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஈரானில் வசிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. ஆபரேஷன் சிந்து என்ற பெயரிலான இந்த நடவடிக்கை மூலம், முதல்கட்டமாக அங்கு வசிக்கும் 110 மாணவர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் டில்லி வந்தனர். டில்லி ஏர்போர்ட்டில் வந்திறங்கிய மாணவர்களை, வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்திவர்த்தன் சிங் வரவேற்றார். ஈரானில் தற்போது நிலவும் சூழல் குறித்து மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இஸ்ரேல் ஏவுகணைகள் பறந்ததையும், ஈரானின் தடுப்பு நடவடிக்கையையும் நேரில் பார்த்த மாணவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி