எமனாக மாறிய டிராபிக் போலீஸ்: கொந்தளித்து எழுந்த மக்கள்: பரபரப்பு | karnataka police
இவர்களுக்கு 2 பிள்ளைகள். மூத்த மகள் ஹிருதிக் ஷா வயது 3 நேற்று முன்தினம் மதியம் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது குழந்தையை தெருநாய் கடித்துவிட்டது. இதைப்பார்த்து பதறிய பெற்றோர் உறவினர்கள் உடனடியாக குழந்தைையுடன் ஆஸ்பிடலுக்கு விரைந்தனர். வழியில் போலீசார் அவர்களை மடக்கினர். ஏன் ஹெல்மெட் அணியவில்லை; ஃபைனை கட்டு என்றனர். குழந்தையை நாய் கடித்து விட்டது. உடல்நிலை மோசமாக உள்ளது. மருத்துவமனைக்கு போகிறோம் என பெற்றோரும் இன்னொரு பைக்கில் வந்த உறவினரும் கூறினர். ஆனால், போலீசார் அவர்களை விடவில்லை. அப்போது, அசோக் பைக்கை பிடித்து போலீஸ் அதிகாரி ஒருவர் இழுக்க, பின்னால் உட்கார்ந்திருந்த வாணிஸ்ரீ நிலை தடுமாறினார்..