உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை: உத்தரவே தவறு: TN அரசு திடீர் மனு |karur Stampede |TVK Vijay

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை: உத்தரவே தவறு: TN அரசு திடீர் மனு |karur Stampede |TVK Vijay

கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பல ஆயிரக்கணக்கான மக்கள் விஜயை பார்க்க வந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழுந்தைகள் உள்பட 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்தது. சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. தவெக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அத்துடன் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் முதல் தவெக நிர்வாகிகள் வரை 80 பேரிடம் இதுவரை விசாரணை நடந்து முடிந்திருக்கிறது.

டிச 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி