உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜாமீனில் வந்த தம்பியின் கதை முடித்த அண்ணன் | Kumbakonam | Kumbakonam Rowdy

ஜாமீனில் வந்த தம்பியின் கதை முடித்த அண்ணன் | Kumbakonam | Kumbakonam Rowdy

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியை சேர்ந்தவர் காளிதாஸ், வயது 36. கும்பகோணம் போலீசில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். அடிக்கடி போலீசில் கைதாகி ஜாமீனில் வெளி வருவது வழக்கம். இப்போது ஜாமீனில் வந்துள்ள அவர் தஞ்சாவூர் கும்பகோணம் ரோட்டில் உள்ள அவரது வீட்டின் முன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இது குறித்து சுவாமிமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் காளிதாஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். காளிதாசை கொன்றது அவரது அண்ணன் பாண்டியன் என்பது தெரியவந்தது. பாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை