கோவை ரயிலில் பெண்களிடம் மாட்டிக்கொண்ட வழக்கறிஞர் lawyer arrested college student photo Coimbator
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக். வயது 47. வழக்கறிஞர் இவர், வேலை நிமித்தமாக தினமும் கோவைக்கு செல்வது வழக்கம். மேட்டுப்பாளையம் டு கோவைக்கு இயக்கப்படும் மெமோ ரயிலில் பயணம் செய்வார். அதே ரயிலில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களும் பயணிப்பர். நேற்றிரவு கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரயிலில் அப்துல் ரசாக் பயணித்தார். அப்போது, ரயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. ரயிலுக்கு வெளியே இயற்கை காட்சிகளை போட்டோ, வீடியோ எடுத்தார். அப்படியே செல்போனை கொஞ்சம் திருப்பி அருகில் நின்றிருந்த கல்லூரி மாணவியையும் படம்பிடித்துள்ளார். மாணவியை உரசியுள்ளார். அதுமட்டுமின்றி, மாணவியை கெட்ட எண்ணத்துடன் தொடர்ந்து பார்த்துள்ளார். இதனால் வெறுப்பாகிப்போன அந்த மாணவி அப்துல் ரசாக்கை சத்தம் போட்டுள்ளார் எதற்காக போட்டோ எடுத்தீங்க என மாணவி கேட்டார். மாணவிக்கு ஆதரவாக இன்னும் சில பெண் பயணிகள் வந்தனர்.