/ தினமலர் டிவி
/ பொது
/ சுற்றுலா சென்றவர்களை சுழற்றி போட்ட சூறாவளி | Madhura boat tragedy - 10 dead several missing
சுற்றுலா சென்றவர்களை சுழற்றி போட்ட சூறாவளி | Madhura boat tragedy - 10 dead several missing
பஞ்சாப் லூதியானாவில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு 30க்கு மேற்பட்டவர்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், மதுரா மாவட்டத்தில் யமுனா ஆற்றில் படகு சவாரி செய்தனர். கேஷி காட் என்ற இடத்தில் சூறாவளி வீசியது. வேகமாக சென்ற படகு, திடீரென ஆட்டம் கண்டு, மிதவை பாலத்தின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. அனைவரும் ஆற்றில் விழுந்தனர். பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்க தொடங்கினர். எனினும், 10 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
ஏப் 10, 2026