உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 ஆண்டுகளை நிறைவு செய்த மன் கி பாத் நிகழ்ச்சியில் உணர்ச்சிவயப்பட்ட மோடி! Mann Ki Batt | 10 Years |

10 ஆண்டுகளை நிறைவு செய்த மன் கி பாத் நிகழ்ச்சியில் உணர்ச்சிவயப்பட்ட மோடி! Mann Ki Batt | 10 Years |

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று, மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலியில் மக்களுடன் பேசி வருகிறார். இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்றைய மன் கி பாத் எபிசோட் உணர்ச்சிகரமானது. நிகழ்ச்சி 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மக்கள் தங்கள் உள்ளூர் மொழிகளில் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்டனர் என்று கூறுவது எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் பஞ்சம் வரும் சமயத்தில் சமாளிக்க உதவும். மன் கி பாத் நிகழ்ச்சியின் செயல்முறை எனக்கு கோயிலுக்கு சென்று கடவுளை பார்ப்பது போன்றது. சமூக உணர்வோடு சமுதாயத்தில் ஆற்றும் பணிகள் மனதின் குரல் நிகழ்ச்சியில் போற்றப்படுகின்றன. புதுச்சேரி கடற்கரையில் தூய்மை குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மாஹே நகராட்சியை சேர்ந்த ரம்யா என்பவரின் குழுவினர் கடற்கரையை தூய்மைப் படுத்துகின்றனர். மதுரையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற ஆசிரியை தனது வீட்டில் மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார். அவரது தந்தையை பாம்பு கடித்த போது மூலிகைச் செடிகளை பயன்படுத்தி உயிரை காப்பாற்ற முடிந்தது. ரம்யா, சுபஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டுக்கள். அமெரிக்க ஜனாதிபதி பைடன், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட டெரகோட்டா, கற்கள், தந்தம், மரம், காப்பர், வெண்கலத்தால் செய்யப்பட்ட நமது கலைப்பொருட்களை திரும்ப வழங்கினார்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி