சொன்ன தேதிக்கு முன்பே சரணடையும் 3 மாநில மாவோயிஸ்டுகள் | Maoists' announcement | Naxals
அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல்கள் இல்லாத தேசமாக இந்தியா மாரும் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவித்தனர். மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரம் அடைந்தது. ஓராண்டில் மட்டும் 287 நக்சல்கள் கொல்லப்பட்டனர்; 1,000க்கும் மேற்பட்ட நக்சல்கள் கைதாகினர். சென்ற 18ம் தேதி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். இது மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. அரசு கோரிக்கையை ஏற்று பல நக்சல் அமைப்புகளை சேர்ந்த முக்கிய நபர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதும் தொடர்ந்தது. இந்த சூழலில் ம.பி., மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்டுகள் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியது.