பரபரக்கும் வங்கதேசம்... மோடியிடம் இருந்து பறந்த மெசேஜ் | Muhammad Yunus | PM Modi | Bangladesh riot
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரத்தால் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். வன்முறையில் 550 பேர் கொல்லப்பட்டனர். இந்துக்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. கோயில்கள் கொளுத்தப்பட்டன. இதற்கிடையே நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இடைக்கால அரசை கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பெயரை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் பரிந்துரை செய்தனர். அவர் தான் நாட்டை வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதற்கு முகமது யூனுசும் ஒப்புக்கொண்டார். பாரிசில் சிகிச்சை பெற்று வந்த அவர் வங்கதேசம் திரும்பினார். இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பதவி ஏற்றார்.