/ தினமலர் டிவி
/ பொது
/ புது பஸ் ஸ்டாண்டு கட்டுமானம் பற்றி சிபிஐ விசாரிக்கணும் | Ex CM Narayanasamy | New bus stand | Corrup
புது பஸ் ஸ்டாண்டு கட்டுமானம் பற்றி சிபிஐ விசாரிக்கணும் | Ex CM Narayanasamy | New bus stand | Corrup
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் திட்டமிடப்பட்ட புது பஸ் ஸ்டாண்டு கட்டுமானப் பணி திட்டமிட்ட காலத்தை தாண்டி நடந்து வந்தது. இன்னொரு பக்கம் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதிப்பட்டனர். பின்னர் ஒரு வழியாக பணிகள் முடிந்து புது பஸ் ஸ்டாண்டு கடந்த மாதம் திறக்கப்பட்டது. பஸ்கள் உள்ளே சென்று வரும் நிலையில் இன்னும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன் ஆகியோர் புது பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்தனர்.
ஜூலை 05, 2025