/ தினமலர் டிவி
/ பொது
/ 30 நக்சல்கள் மீது என்கவுன்டர் நடத்திய போலீஸ் | Naxal's Encounter | Chhattisgarh
30 நக்சல்கள் மீது என்கவுன்டர் நடத்திய போலீஸ் | Naxal's Encounter | Chhattisgarh
30 நக்சல்களை பொசுக்கிய போலீஸ்! சிதறி கிடக்கும் AK47, வெடிகுண்டுகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர், தாண்டேவாடா உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய அபுஜ்மத் வனப்பகுதி அமைந்துள்ளது. இது நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். காட்டுக்குள் மறைந்திருந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்துவது, துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றி வந்தனர். இதையடுத்து அபுஜ்மத் வனப்பகுதி வெள்ளியன்று அதிரடியாக இறங்கியது சத்தீஸ்கர் போலீஸ் படை. தாண்டேவாடா மாவட்ட போலீஸ் நடத்திய என்கவுன்டரில் 30 நக்சல்கள் இறந்தனர். நக்சல்கள் என்கவுன்ட்டர் தொடர்பாக தாண்டேவாடா எஸ்பி கவுரவ் ராய் விளக்கம் அளித்துள்ளார்.
அக் 04, 2024