உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 4 மாவட்டங்களில் மட்டும் ஒலித்த எதிர்ப்பு கோஷம் |Congress protest|Against Annamalai|Selvaperunthagai

4 மாவட்டங்களில் மட்டும் ஒலித்த எதிர்ப்பு கோஷம் |Congress protest|Against Annamalai|Selvaperunthagai

தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என விமர்சித்தார் . அதற்கு ரியாக்ஷன் கொடுத்த செல்வப்பெருந்தகை, நான் ரவுடி என்பதற்கு அண்ணாமலை ஆதாரம் காட்ட வேண்டும்; இல்லை என்றால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடர்வேன் என எச்சரித்தார். இதையடுத்து செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளை பட்டியலிட்டு, மன்னிப்பு கேட்க மாட்டேன்; இந்த விவகாரத்தில் பின்வாங்கவும் மாட்டேன் என அண்ணாமலை பதிலடி கொடுத்தார். இதனால் ஆவேசமடைந்த காங்கிரசார் சென்னையில் கழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் தலைமையில், அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை