சென்னை ஐஐடி பகுப்பாய்வில் தகவல்! Neet | NTA | IIT | Chennai
மே 5ம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததால், மாணவர்கள் பலர் அதிக மதிப்பெண் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. எனவே, நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யவும், மறு தேர்வு நடத்தவும், வினாத்தாள் லீக் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை கடந்த 8ம் தேதி விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை உறுதி பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ஜூலை 12, 2024