சமாளிக்க முடியாமல் திணறிய நிர்வாகிகள்
சமாளிக்க முடியாமல் திணறிய நிர்வாகிகள் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, தருமபுரி, பென்னாகரத்தில் தேமுதிக சார்பில் அன்னதானம் மற்றும் இலவச புடவை வழங்கும் விழா நடந்தது. விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கொஞ்சம் பேருக்கு மட்டும் புடவைகளை வழங்கிவிட்டு, அன்னதானம் தொடங்கி வைக்க அங்கிருந்து சென்றுவிட்டனர். அப்போது, இலவச புடவையை பெற பெண்கள் மேடையில் முண்டியடித்தனர். மொத்தமாக வைக்கப்பட்டு இருந்து புடவைகளை அடித்து பிடித்து எடுத்து சென்றதால், நெரிசல்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கட்சி நிர்வாகிகள் திணறினர்.
ஆக 22, 2024