உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரெய்டை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! | Kathir Anand | ED Raid | DMK MP | Durai Murugan

ரெய்டை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! | Kathir Anand | ED Raid | DMK MP | Durai Murugan

ரெய்டை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! | Kathir Anand | ED Raid | DMK MP | Durai Murugan வேலூர் மாவட்டம் காட்​பாடி காந்தி நகரில் நீர்​வளத்​துறை அமைச்சர் துரை​முருகன் வீடு மற்றும் இவரது மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்​களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 3ம் தேதி சோதனை​யில் ஈடுபட்​டனர். கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி​யில் 44 மணி நேரம் நடைபெற்ற சோதனை​யில் கட்டுக் கட்டாக பெரும் தொகையை பறிமுதல் செய்​ததுடன் ஆவணங்​கள், கம்ப்​யூட்டர் ஹார்​டுடிஸ்க் உள்ளிட்​ட​வற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்​தனர். இதன் தொடர்ச்​சியாக கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி​யில் 2-ம் கட்டமாக நேற்று முன்தினமும் 5 பேர் அடங்கிய அமலாக்​கத்​துறை அதிகாரிகள் மீண்​டும் சோதனையில் ஈடுபட்​டனர். இச்சோதனை நேற்று அதிகாலை 2.10 மணிக்கு நிறைவடைந்தது. கல்லூரி​யின் இமெயிலில் யில் இருந்து வெளிநபர்​களுக்கு அனுப்​பப்பட்ட இமெயில்களை நகல் எடுத்​துச் சென்​றனர். சோதனை முடிந்த பிறகு கதிர் ஆனந்த் எம்.பி ஜனவரி 22-ம் தேதி சென்னை​ அமலாக்​கத் துறை அலுவல​கத்​தில் ​ ஆஜராக வேண்​டும் என சம்மன் வழங்கி உள்ளனர்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி