ஊரே அசந்து பார்க்கும் 105 வயது மூதாட்டி மாரியாயி! | Old woman | 105 Years | Health improvement
இது எப்படி நடந்துச்சுனு இன்னமும் நம்ப முடியல! ஷாக் கொடுத்த மூதாட்டி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிரங்கோட்டை ஊராட்சியில் அமைந்திருக்கிறது தென்பாதி ஆண்டாள் கொள்ளை கிராமம். இங்கு வசிக்கும் மாரியாயி என்ற 105 வயது மூதாட்டி தான் இப்போது டாக் ஆப் தி டவுன். ஊரெல்லாம் இவரை பற்றிய பேச்சு தான். அதற்கு காரணம், போன மாதம் வரை படுத்த படுக்கையாக கிடந்தவர் இப்போது அப்படியே நேர் மாறாக இருப்பது தான். மாரியாயிக்கு 70 வயதில் செல்லம்மாள் சுப்பம்மாள் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் மூத்த மகள் சுப்பம்மாள் வீட்டில் வசிக்கிறார். மொத்தம் 6 பேர பிள்ளைகள் 14 கொள்ளு பேர பிள்ளைகள் இருக்கின்றனர்.