/ தினமலர் டிவி
/ பொது
/ பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால் விட்ட விவகாரத்தில் தீர்ப்பு palanisamy| stalin| tn assembly
பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால் விட்ட விவகாரத்தில் தீர்ப்பு palanisamy| stalin| tn assembly
சட்டசபையில் நேற்று பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டாலின் பேசும்போது, அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் 24 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டபோதும் போராட்டம் நடத்துவது ஏன்?. உங்கள் ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தில் 12 நாட்களுக்கு பிறகுதான் வழக்கு பதியப்பட்டது என்றார். குறுக்கிட்ட பழனிசாமி, அந்த சம்பவத்தில் 24 மணிநேரத்தில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிஐ இடம் ஒப்படைத்தோம் என்றார்.
ஜன 11, 2025