யோகி ஆதித்யநாத் ஸ்டைலில் பகவந்த் சிங் மான் அதிரடி ஆக் ஷன் Punjab aap government anti drug drive bBu
பஞ்சாப் இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதை இளைஞர்களால் குற்றங்களும் அதிகரித்து வருவது முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு பெரும் கவலையை அளித்தது. இதனால் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் உத்தரப்பிரதேச பாஜ அரசை பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசு பின்பற்ற துவங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கையை முதல்வர் ஆதித்யநாத் யோகி எடுத்தார். கடும் குற்றச்செயல்களில் ஈடுபடும் கிரிமினல்கள் கட்டிய கட்டங்களை இடிப்பதுதான் புல்டோசர் நடவடிக்கை. அதே பாணியில் பஞ்சாபில் போதை பொருள் கடத்தல்காரர்கள் வாங்கிக் குவித்த சொத்துக்களை போலீசாரும், அதிகாரிகளும் அலசி ஆராய்கின்றனர்.